சீர் வாசகர் வட்டம்
தமிழ்நாட்டு வரலாறு
தமிழ்நாட்டு வரலாறு
- புத்தகம் 7 - 10 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
Couldn't load pickup availability
பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல் 40ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை. தமிழரின் மத-ஆன்மீக தத்தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன், இழந்துபோன தமிழ் அடையாலத்தை மறு கண்டுபிடிப்பு செய்கிறது. களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல, அவர்களது காலத்தில் தான் குறளும், சிலம்பும், மேகலையும் உருக்கொண்டன. அது சமண- பௌத்தர் மேலோங்கியிருந்த காலமாதலால், இருண்ட காலமாக்கப்பட்டது என்கிறது.
பழங்காலத்திலிருந்து, விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல், தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து, தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1800 – 1801 தென்னிந்தியக் கலகத்திலிருந்து தொடங்குகிறது என்று நிறுவுகிறது. பெரியார் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் சாதக – பாதக அம்சங்களுடன் பரிசீலித்து, துல்லியமானதும், முழுமையானதுமான ஒரு பதிவை நோக்கிய பெரியதொரு காலடிவைப்பை எடுத்துவைக்கிறது.

